Tuesday, October 21, 2014

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம்: தமிழக அரசு
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், கட்டாய கல்வி உரிமை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் யார்?: சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனு: கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்தபின், அனைத்துப் பள்ளிகளும், மாநில அரசிடம் இருந்து அங்கீகாரம் பெற வேண்டும். இந்த சட்டத்தின் கீழ், விதிமுறைகள் வகுக்கப்படும்போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரி யார் என்பதை நிர்ணயிக்க தமிழக அரசு தவறி விட்டது.
பள்ளி கல்வித்துறை, கடந்த 2011, ஏப்ரலில் பிறப்பித்த அரசாணையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், குற்றங்களுக்கான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு, அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து இருந்தது. அதில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் பெறவில்லை. தமிழக அரசின் அங்கீகாரம் பெறாமல், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்தப் பள்ளிகள் மீது, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. அங்கீகாரம் பெறாமல் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்க முடியாது. எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எதிராக, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில், உரிய பிரிவுகளை கொண்டு வர உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை: இம்மனு, தலைமை நீதிபதி எஸ்கே. கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை தாக்கல் செய்தார். அந்த அறிவிப்பாணையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம், பள்ளி கல்வி இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மனு பைசல்: இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், பதில் மனுத் தாக்கல் செய்தபின், மாநில அரசு, கடந்த மாதம் 19ம் தேதி, அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதை அமல்படுத்து வதை தவிர, மேற்கொண்டு எந்த உத்தரவும் தேவையில்லை என, மனுதாரரின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். மனு, பைசல் செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Saturday, October 4, 2014

இரண்டாவது பட்டியலில் இடம் பெற போகிறவர்கள் யார்?
மதுரை நீதிமன்றம் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே நேரத்தில் மதிப்பெண் தளர்வு மூலம் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். வரும் காலத்தில் மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருக்காது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். ஒருவேளை தமிழக அரசு மேல்முறையீடு செய்து மதிப்பெண் தளர்வை தக்க வைக்க முயற்சி செய்தால் மட்டுமே மதிப்பெண் தளர்வு நடைமுறையில் இருக்கும். இனி இரண்டாவது பட்டியல் பற்றிய விஷயத்திற்கு வருவோம். ஆதிதிராவிடர் மற்றும் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நோடிபிகேஷன் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டாவது பட்டியலில் இடம் பெற போகிறவர்கள் யார்?
90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களா?
மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சி பெற்றவர்களும் இந்த இரண்டாவது பட்டியலில் இடம் பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை நீதிமன்றம் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதால் இந்த இரண்டாவது பட்டியலில் 90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களே இடம் பெறுவர் என்ற எதிர்பார்ப்பே தற்சமயம் நிலவுகிறது.
இந்த குழப்பத்திற்கு முடிவு ஏற்பட வேண்டும் என்றால் இரண்டாவது பட்டியல் என்று பரவலாக அழைக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நோடிபிகேஷன் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வரவேண்டும். அப்போது தான் குழப்பம் நீங்கும்.
செய்தி பகிர்வு : ராப் ராகேஷ்

Saturday, September 20, 2014

TNTET - கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் இருப்பவர்கள் தொடுத்த வழக்கு - தகுதிதேர்வு எழுதவேண்டுமா? - சுப்ரீம் கோர்டில் செவ்வாய் கிழமை வருகிறTNTET - கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் இருப்பவர்கள் தொடுத்த வழக்கு - தகுதிதேர்வு எழுதவேண்டுமா? - சுப்ரீம் கோர்டில் செவ்வாய் கிழமை வருகிறது

கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது. அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.

இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.
மேலும் மூன்று மாதம் கடந்த பிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதி முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கென்வே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது. தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள்.து
TNTET - வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை 22..09.14 தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை 22..09.14 தீர்ப்பு வழங்கப்படுகின்றது. தமிழகத்தில்ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் 'வெயிட்டேஜ்' முறையை பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ் முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள்கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள்தேர்வு செய்யப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை மற்றும் அறிவியல் ரீதியானதேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பின்பற்றுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை'என்று வாதாடினார்.

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பலர் ஆஜராகி, கடந்த 2000ம்ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும், அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும் வித்தியாசம் உள்ளது. பழைய முறையில் மனுதாரர்கள்படித்தனர். குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில் படிப்பவர்கள் அதிகமான மார்க்பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள் அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்றுவாதாடினார்கள்.

இதே போன்று 5% தளர்வு குறித்து ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் நடைபெற்றன. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதற்கிடையில் இவ்வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதக்கருத்துகளை எழுத்துபூர்வமாக வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஏறத்தாழ 500 பக்க அளவில் தங்கள் வலுவான கருத்துகளை தயாரித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாயின.

வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை(22..09.14) காலை தீர்ப்பு வழங்கப்படுகின்றது. இத்தீர்ப்பினை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுநியமன கலந்தாய்வில் கலந்துக்கொண்ண்டவர்களும், அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்களும் பரபரப்போடு எதிர்நோக்கியுள்ளனர்

Friday, September 12, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

அமைச்சர்கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் 71ஆயிரம் ஆசிரியர்காலியிடம் இருந்தது.அதன்பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 53 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாகநியமனம் செய்தார்.தமிழ்நாட்டில் விரைவில்14 ஆயிரத்து 700ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் 4 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்றுள்ளது.வரும் கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதல்10 இடங்களுக்குள் வரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படிகுழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

Sunday, September 7, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வை, யார் எழுத வேண்டும்; யார் எழுதக் கூடாது ******************************************************************
ஆசிரியர் தகுதித் தேர்வை, யார் எழுத வேண்டும்; யார் எழுதக் கூடாது' என்பது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, இரு துறைகளின் இயக்குனர்கள், தெளிவான உத்தரவை பிறப்பிக்காததால்,
பணி நிரந்தரம் ஆக முடியாமல், ஏராளமான ஆசிரியர் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், 2012ல், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. இந்த தேர்வை யார் எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம், பலமுறை தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.அதன்படி, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வு குறித்து, அறிவிப்பு வெளியான, 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்குப் பின், புதிய ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகி, அதன்பின்
பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கண்டிப்பாக, டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.ஆனால், மேற்கண்ட தேதிக்கு முன், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.
அதேபோல், 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன், புதிய ஆசிரியர் தேர்வு குறித்தஅறிவிப்பு வெளியாகி, மேற்கண்ட தேதிக்குப் பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக பணியில் சேர்ந்த, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர் அனைவரையும், டி.இ.டி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றால் தான், பணி
நிரந்தரம் செய்வோம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும், இழுத்தடிப்பாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர், ரைமண்ட் பேட்ரிக் கூறியதாவது:டி.ஆர்.பி., உத்தரவை, அதிகாரிகளிடம் காட்டினாலும், அதை, அவர்கள் ஏற்பதில்லை. 'எங்களுக்கு, எங்கள் துறை இயக்குனரிடம் இருந்துதெளிவான வழிகாட்டுதல் உத்தரவு வர வேண்டும்; இதுவரை வரவில்லை. வந்தால் தான், அதன்படி செயல்பட முடியும்' என, கூறுகின்றனர்.இதனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணி நிரந்தரம் ஆக முடியாமல் தவித்து வருகின்றனர். இது, முக்கியமான பிரச்னை என்பதால், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள், டி.இ.டி., தேர்வு குறித்த வழிகாட்டுதல் உத்தரவை, உடனடியாக, மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்
TET 2013 ஆன்லைனில் சான்றிதழ் வெளியீடு

கடந்த 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழை, பதிவிறக்கம் செய்துகொள் ளும் வகையில் ஆன்லை னில் டிஆர்பி வெளியிட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. இதில், 27ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி அடைந்தனர். அதன்பின், கடந்த ஜன. 10ம் தேதி விடைகளில் மாறுதல் செய்யப்பட்டதில் கூடுதலாக 2 ஆயிரத்து 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக தமிழக அரசு குறைத்ததையடுத்து மேலும், 42 ஆயிரத்து 647 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தேர்ச்சி அடைந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரமாக உயர்ந்தது.
இவர்கள் அனைவருக் கும் பகுதி, பகுதியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வெயிட்டேஜ் அடிப்படையில் பெறும் கட்&ஆப் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியர் பணி வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டு, கட்&ஆப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 2013ம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (முதல் மற் றும் 2ம் தாள்) அனைவருக் கும் ஓராண்டிற்கு பின் டிஆர்பி இணையதளத்தில் தேர்ச்சி சான்றிதழ் வெளியிடப்பட்டது.
தகுதி தேர்வு பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, டிஆர்பி இணையதளத்தில் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சான்றிதழ்களை கலராக (வண்ணம்) பிரின்ட் எடுத் துக் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழை பதிவிறக்கம் செய்தவர்கள், அதில் ஏதாவது பிழைகள் இருப்ப தாக அறிந்தால் டிஆர்பியை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 7 ஆண்டுகள் தகுதி உடையதாக இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த சான்றிதழ் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
தகுதிகாண் மதிப்பெண் முறை: ரத்து செய்யக் கோரிக்கை

ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரியுள்ளது.
இது தொடர்பாக அந்தக் கழகத்தின் தலைவர் பி.இளங்கோவன் கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பணி அனுபவத்தை மட்டுமே ஆசிரியர் நியமனத்துக்கான தகுதியாக கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், தகுதிகாண் மதிப்பெண் முறையில் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கை, கடந்த சில ஆண்டுகளில் பிளஸ் 2 முடிப்பவர்களுக்கே நிச்சயம் சாதமாக இருக்கும்.
அதோடு, பட்டப்படிப்பில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு மதிப்பீட்டு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைவரையும் ஒரே அளவுகோலில் கருதுவது சரியானதாக இருக்காது.
எனவே, ஆசிரியர் நியமனத்துக்கான தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றார் அவர்.
TET 2013 குறித்த பிரச்சினை முடிந்த பிறகே, புதிய டெட் குறித்த அறிவிப்பு?
கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும் தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது. இதுவரை, புதிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,) கொண்டு வந்தது. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. 2011ல், தமிழக அரசு, விதிமுறைகளை வெளியிட்டது.

என்.சி.டி.இ., விதிமுறையில், 'ஆசிரியர் தகுதி தேர்வை, ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012, ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது.அதில், 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், அதே ஆண்டு அக்டோபரில், மறுதேர்வு நடத்தப்பட்டது. பின், கடந்த 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. நடப்பு ஆண்டில், இதுவரை, புதிய டி.இ.டி., தேர்வு நடத்தவில்லை.நடப்பு ஆண்டு முடிய, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பை, குறைந்தது, இரு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும். அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவதாக இருந்தால், தற்போது, அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

சிக்கல்:

கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, கடந்த மாதம் தான், டி.ஆர்.பி., வெளியிட்டது. தற்போது, பணி நியமனம் துவக்கப்பட்ட நிலையில், பல்வேறு வழக்குகள் காரணமாக, பணி நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இடைக்கால தடை விதித்ததால், இன்றுவரை சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தில்,'ஏற்கனவே நடந்த தேர்வு பிரச்னையே, இன்னும் தீரவில்லை. இதனால், புதிய தேர்வு குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, தெரிவித்தனர்.இதனால், புதிய தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பட்டதாரிகள்:

இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:ஆண்டுக்கு, ஒரு டி.இ.டி., தேர்வையாவது, கண்டிப்பாக நடத்த வேண்டும். பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு, அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் வேலையில் சேர, டி.இ.டி., தேர்வு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்

Tuesday, August 12, 2014

ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம்: நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை

அரசு பள்ளிகளில், புதிதாக நியமிக்கப் பட உள்ள ஆசிரியர்களில், தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைவு. வெறும், 772 இடங்கள் மட்டுமே, தமிழ் பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 'பாட வாரியான பணி நியமன வரிசையில், தமிழை, நான்காவது இடத்தில் வைத்திருப்பது தான், இதற்கு காரணம்' என, தமிழ் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் தேர்வில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, நேற்று முன்தினம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 10,726 பணியிடங்கள் ஒதுக்கிஉள்ள போதும், தமிழ் பாடத்திற்கு, 772 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளன.

ஆங்கிலத்திற்கு அதிகம்:

ஆங்கிலத்திற்கு, 2,822 இடங்களும், வரலாறு பாடத்திற்கு, 3,592 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அறிவியல் பாடத்திற்கு, 1,600க்கும் அதிகமான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.தமிழ் பாடத்திற்கு மட்டும், பணியிடங்கள் எண்ணிக்கையை குறைத்து வழங்கியதற்கு, தமிழ் ஆசிரியர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து, தமிழ் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அரசியல் தலைவர்கள், தமிழ் தமிழ் என, மூச்சுக்கு, முன்னூறு முறை கூறுகின்றனர். ஆனால், தமிழகத்தில், தமிழ் பட்டதாரிக்கு ஏற்பட்டுள்ள உண்மையான நிலை, இது தான். தமிழ் பாடத்தில், 9,500 பேர் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற்றபோதும், 772 பேருக்கு தான், வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது.

தமிழுக்கு முன்னுரிமை வேண்டும்:

மற்ற பாடங்களுக்கு இணையாக, தமிழ் பாடத்திற்கும், வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங் களை நிரப்புவதில், தமிழ் பாடத்திற்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு, தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து, தமிழக தமிழாசிரியர் கழகத்தின், சென்னை மாவட்ட தலைவர், தாயுமானவன் கூறியதாவது:ஆசிரியர் நியமன வரிசை, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தமிழ், ஆங்கிலம் என, உள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எனில், ஒரு வகுப்பில், 120 மாணவர்கள் இருந்தால், முதலில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, மூன்று பாட ஆசிரியர் நியமிக்கப்படுவர். அதே வகுப்பில், 160 மாணவர்கள் இருந்தால் தான், தமிழ் பாடத்திற்கு, ஒரு பணியிடம் கிடைக்கும். அடுத்த 40 மாணவர்கள், கூடுதலாக இருந்தால் தான், ஆங்கிலத்திற்கு ஒரு பணியிடம் கிடைக்கும்.மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால், எட்டாம் வகுப்பு எடுக்கும் தமிழ் ஆசிரியரையே, 10ம் வகுப்பு தமிழ் பாடமும் எடுக்க சொல்கின்றனர். இதனால், புதிதாக ஒரு பணியிடம் கிடைப்பது தடைபடுகிறது. ஆங்கிலத்திற்கும் இதே நிலை தான்.

ஆங்கில பட்டதாரி ஆசிரியர்:

இதுவரை, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர் தான், ஆங்கில பாடம் நடத்தி வந்தனர். தற்போது தான், முதல் முறையாக, நேரடியாக, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுகின்றனர். அதனால், ஆங்கிலத்திற்கு, கூடுதல் பணியிடம் கிடைத்து உள்ளது.பணி நியமனத்தில், தமிழை முதலில் சேர்க்க வலியுறுத்தி, பள்ளிக்கல்வித் துறை செயலர், சபிதாவிடம், கோரிக்கை மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக, அவர் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை

காரணம் என்ன?

தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்தது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம் கூறியதாவது:காலி பணியிடங்களில், 50 சதவீதத்தை, பதவி உயர்வு மூலமும், 50 சதவீதத்தை, நேரடி பணி நியமனம் மூலமும், கல்வித் துறை நிரப்புகிறது.இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், 66.6 சதவீத இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 33.3 சதவீத இடங்கள் மட்டுமே, நேரடியாக நியமிக்கப்படுகின்றன. இந்த முறையினால் தான், தமிழ் பாடத்திற்கு, இடங்கள் குறைவாக வருகின்றன.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
தமிழில் படித்தோருக்கான சிறப்பு இடஒதுக்கீடு அட்டவணைக்கு எதிரான மனு தள்ளுபடி

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான அட்டவணையை எதிர்த்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நெல்லை கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த எஸ். கோமதிநாயகம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் பட்டப்படிப்பை தமிழில் படித்து தேர்ச்சி பெற்றேன். கடந்த 2010-ம் ஆண்டில் குரூப் 2 தேர்வு எழுதினேன். தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தது. இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டை எப்படி செயல் படுத்த வேண்டும் என்பதற்கு தனி அட்டவணை உருவாக்கப் பட்டுள்ளது. அந்த அட்டவணை தவறாக உள்ளது. இதனால், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அரசாணையின் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே, சிறப்பு இட ஒதுக்கீடு அரசாணை யின் நோக்கம் நிறைவேறும் வகையில் புதிய அட்டவணையை வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, டிஎன்பிஎஸ்சி அதிகாரி நேரில் ஆஜராகி, சிறப்பு இடஒதுக்கீடு எப்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்ற அட்டவணை தவறாக இருப்பதாகவும், புதிய அட்டவணை வெளியிட அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதன்படி, புதிய அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிடும்போது, இந்த வழக்கை முன்பு விசாரித்த நீதிபதி, முந்தைய அட்டவணைப்படி நடைபெற்ற நியமனங்கள், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என உத்தரவிட்டார். எனவே, புதிய அட்டவணைப்படி மனுதாரருக்கு பணி வழங்க வேண்டும் என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, புதிய அட்டவணை 2014 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் புதிய அட்டவணை இனிவரும் நியமனங்களுக்குதான் பொருந்தும். 2010 நியமனங்களுக்கு பொருந்தாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
பணி நியமன உத்தரவுகள், அஞ்சல் மூலம் அனுப்பும் பணி, நேற்றே துவங்கியதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது

தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல்,
பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140 பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக, பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள், நேற்று, கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்நிலையில், 140 பேருக்கும், பணி நியமன உத்தரவுகள், அஞ்சல் மூலம் அனுப்பும் பணி, நேற்றே துவங்கியதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. 15ம் தேதிக்குள், அனைவருக்கும், பணி நியமன உத்தரவு கிடைத்துவிடும் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் தகவல்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் எதிரே பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.பள்ளிக் கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 1,107 பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை.

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 934 பேருக்கு பணி வழங்கவும் வலியுறுத்தல்.

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் :
மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை.ஏற்கனவே வெளியான தேர்வு பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்றுள்ளனர்.பணிக்கு காத்திருப்பவர்கள் விவரம் அரசுக்கு தெரிவிக்கப்படும்:தேர்வு வாரிய உறுப்பினர் தகவல்.

Friday, August 8, 2014

தமிழகத்தில்
3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி: சங்க மாநில செயலர் தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரையில் நாளை (9ம் தேதி) முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். மாணவர்களின் வேலை, கல்வி தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களுக்கு மெமோ வழங்குதல், சஸ்பெண்ட் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அவற்றை உடனே நிரப்ப வேண்டும்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு குறித்து கருணாகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி பதவி உயர்வு, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பாஸ்போர்ட் மற்றும் நிலம் வாங்க வேண்டும் என்றால் கூட இயக்குநர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்க வேண்டும். பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த திருச்சி, சென்னையில் மையம் அமைக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, August 6, 2014

TNTET - கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா?

இப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல். இந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது.

வேறு எந்த தகுதியையும் கருத்தில் கொள்ளாமல், வேறுமனே மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்வது நியாயமானதா என்ற குமுறல்கள், பட்டதாரிகள் மத்தியில் பரவலாக உள்ளது.

இதுகுறித்து கல்விமலர் இணையதளத்திற்கு தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட, சில பெயர் குறிப்பிட விரும்பாத, அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, TET என்ற தகுதித்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே எங்களுக்கு போதாத காலம் தொடங்கியது.

ரு தரமான ஆசிரியரை மதிப்பிட, TET என்ற தேர்வு மட்டுமே சரியான ஒன்றா என்ற கேள்வி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்தப் பிரச்சினை கிடக்கட்டும். அந்த தேர்வையெழுதி, தேர்ச்சியும் பெற்றாகிவிட்டது.
ஆனால், தேவைக்கும் அதிகமான ஆசிரியப் பட்டதாரிகள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதியானவர்களை தேர்வுசெய்ய, அரசு தரப்பில் கடைபிடிக்கும் நடைமுறைகள்தான் கொடுமையாக இருக்கின்றன.

வெறுமனே மதிப்பெண் அடிப்படை என்பது எப்படி சரியாக இருக்கும். 12ம் வகுப்புத் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1000 மதிப்பெண்கள் பெறுவதற்கும், இன்று அந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இன்றைய நிலையில், 1100 மதிப்பெண்களை மிகவும் சாதாரணமாக பெறுகின்றனர் மாணவர்கள். அதற்கேற்ப நடைமுறைகள் மாறிவிட்டன.

அதேபோல், பி.ஏ., ஆங்கில இலக்கியம் போன்ற பட்டப் படிப்புகளில், 10 ஆண்டுகளுக்கு முன்னால், 50% மதிப்பெண்கள் எடுப்பதே சிறப்பானதாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்றோ, 70% மதிப்பெண்களே சாதாரணம். நடைமுறைகள் அவ்வாறு மாறிவிட்டன. எனவே, மதிப்பெண்களை மட்டுமே வைத்து அளவிடுவது எந்த வகையில் நியாயம்?

மேலும், சமூகநீதி சலுகைகளான, கலப்புத் திருமணம் புரிந்தோர், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான முன்னுரிமை சலுகைகளுக்கு மதிப்பில்லையா? வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பல்லாண்டு காலம் காத்திருப்பவர்களுக்கு நீதி கிடைக்காதா?

நாங்கள் TET தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, அரசுப் பணிக்குத் தேர்வு செய்யும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள்தான் சிக்கலானவைகளாக உள்ளன.

எந்தவித நடைமுறை அறிவும், அனுபவமும் இல்லாத புதிதாக படிப்பை முடித்த ஆசிரியப் பட்டதாரிகள், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆப் என்ற நடைமுறையின் மூலம், தகுதியான ஆசிரியர்கள் என்ற பெயரில், பல மூத்த, அனுபவமிக்க, முன்னுரிமை தகுதிகளைப் பெற்று, TET தேர்விலும் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகளை புறந்தள்ளி, பணி வாய்ப்புகளைப் பெறுவது எந்த வகையில் நியாயம்?

வெறுமனே, பாடப்புத்தக அறிவு மட்டுமே தகுதியான ஆசிரியர்களை உருவாக்கி விடுமா? எனவே, தயவுசெய்து, கட்-ஆப் அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு என்ற நடைமுறையை கைவிட்டு, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பதிவு மூப்பு, முன்னுரிமை சலுகைகள், பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே, பணி நியமனம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை அரசு தயவுகூர்ந்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Monday, August 4, 2014

தாள் 2 இறுதி பட்டியல் இன்று நிச்சயம் வெளியாகும்

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இறுதி பட்டியல் வெளியாகும் தேதி குறித்த விசாரனைக்காக நேரடியாக சென்ற தேர்வர்களிடம் ஆ.தே.வாரிய
தலைவர் "தாள் 2 இறுதி பட்டியல் இன்று நிச்சயம் வெளியாகும்" என வாய்மொழியாக கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என கடவுளை பிரார்த்திப்போம்!

https://docs.google.com/file/d/0ByAQcFNqemV0M2Y4N0NORFMtMUE/edit?pli=1
இன்று TNTET பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி:

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேருக்கான -வெயிட்டேஜ்- மதிப்பெண் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுசெய்யப்படுகின்றனர்.

http://www.dinamani.com/latest_news/2014/08/03/ஆகஸ்ட்-4-இல்-பட்டதாரி-ஆசிரியர/article2362593.ece

Monday, July 21, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள் - தினமணிஆசிரியர் தகுதித் தேர்வு "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள் - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளன.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது.

இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம்.

பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச் சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களின் விவரம்:

1. விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் - ஜூலை 21, 22 - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

2. சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை - ஜூலை 23, 24 - அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

Saturday, July 19, 2014

ஆசிரிய சகோதரர்களே.. நண்பர்களே.. அவசியம் பகிரவும்.. பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு உதவவும்..

T.N.T.E.T தேர்வில் வெற்றிபெற்று.. குறிப்பாக
பி.லிட்.. தமிழ் மற்றும் DT.ed. முடிதத்தவர்கள் பெரும்பாலும்
ineligiblity ஆக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.. எனவே T.R.B மீது வழக்கு தொடுத்து stay வாங்க உள்ளோம்.. பாதிக்கப்பட்ட நண்பர்கள் இருந்தால் 
இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.. உதவி காத்திருக்கிறது.. வள்ளிமுத்து..8608432550 இது அநீதிக்கு எதிரான உரிமை போராட்டம்...
TNTET: இதயத்தில் கசியும் இரத்தம் துடைக்கப்படுமா?
விடிவு காலம் எப்போது??? 

இன்றாவது தணியும் நம் தாகம் என்று எண்ணியிருந்த நம் மனம் இன்றும் ஏமாற்றத்தையே அனுபவித்தது. தமிழக முதல்வர், தமிழக மக்களின் தாகம் தீர்த்த பெருமையை இன்று விதி எண் 110 ன் கீழ் வாசித்து அமர்ந்தாக செய்திகள் வாசிக்க படுகின்றது. விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகளின் கண்களில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் உறுதியுடன் போராடி 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு நீதிமன்ற தீர்ப்பாணை பெற்று தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி! தமிழக மக்களின் கண்ணீர் துடைத்த பெருமை நமது முதல்வரையே முழுமையாக சாரும்.

அதே சமயம் தமிழக முதல்வருக்கு, டெட் தேர்வர்களான எங்களின் கஷ்டங்களில் சில துளிகளை விளக்க விரும்புகிறோம் ...

இளைஞர்கள்;

கண்ணில் பல்வேறு எதிர்பார்ப்புகள். இளைஞர்களின் பெற்றோர் பலர் பராமரிக்க வேண்டிய முதியோர்களாக உள்ளனர். தமது அக்கா/தங்கையின் திருமணத்தை முன் நின்று நடத்த வேண்டிய கட்டாயம்.. பல்வேறு பொறுப்புகள்..

பெண்கள்;
பலருக்கு "திருமண நிச்சயதார்த்தம்" நடந்தும் திருமணம் நின்று போன நிலை. திருமணம் ஆனவர்களின் நிலையோ காண்போர் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும். பச்சிளம் குழந்தைகளை பிரிந்து, அந்த குழந்தையின் பசியை கூட ஆற்ற இயலாமல், குடும்ப பொறுப்புகளை மறந்து, உறவுகளை துறந்து, ”பணி நியமனம்” என்பதை மனதில் தேக்கி, புத்தங்களை கண்களில் தேக்கி பட்ட அவஸ்தை அதிகம்.

மூத்தவர்கள்;
சீனியாரிட்டியில் என்றாவது ஒரு நாள் வேலை கிடைக்கும் என்ற கனவுடன் ,கிடைத்த ஏதோவொரு வேலையை செய்துவிட்டு, படித்திருந்தும் சமுதாயத்திலும், குடும்பத்திலும் போதுமான அங்கீகாரம் இல்லாமல், ”முக்கா கிழவன் ஆனபிறகு, இவங்களுக்கு எங்க வேலை கிடைக்கப்போகுது” என்ற ஏளனப்பேச்சுக்கு இடையிலும் இளையோருடன் போட்டி போட்டு படித்து டெட் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, இதோ அறிவிப்பு வரும், அதோ அறிவிப்பு வரும் - என்று ஏங்கித் தவிக்கும் மூத்தவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று "கானல் நீர்" ஆனதென்னமோ உண்மை..


எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியில் இன்றும் நாங்கள் வாழ்ந்து(?????) கொண்டிருக்கிறோம் .. தரை மேல் பிறக்க வைத்தான் ... எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்றார் - இதய கனி. நீங்கள் எங்களை "கண்ணீரில்" மிதக்க வைக்காதீர்கள்.

அம்மையே, இன்று முழுவதும் கூடுதல் பணியிடம் குறித்து அறிவிப்பு வருமா? பணி நியமன தேதி குறித்து அறிவிக்கப்படுமா? என்று ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு யுகமாக கழித்தோம். விதி 110 குறித்து இலட்சம் முறை சிந்தித்திருப்போம். எங்கள் இதயங்களில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. தாயன்புடன் துடைத்து விடுவீர்கள் என்று, நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

- என்றும் நம்பிக்கையோடு அனைத்து டெட் தேர்வர்கள் சார்பில்,

- ராம் ராம் - மதுரை B+

Thursday, July 17, 2014

டெட் தேர்வாளர்கள் எதிர் நோக்க வேண்டியவை

இனி வரும் இளங்கலை பட்டதாரிகள் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருப்பார்கள். ஏற்கனவே முடித்தவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மாற்ற முடியாது. இனி வரும் கல்வியியல் பட்டதாரிகள் 
மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருப்பார்கள். குறிப்பாக PRACTICAL மதிப்பெண் அதிகமாக இருக்கும். ஏற்கனவே முடித்தவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மாற்ற முடியாது. தொலை தூர கல்வி மூலம் முடிப்பவர்கள் கூட தங்கள் மதிப்பெண்ணை அதிகம் பெற வழிகள் உள்ளன. ஆனால் ஏற்கனவே முடித்தவர்களுக்கு ஒரே வழி(வலி) தான் உள்ளது. அது டெட் மதிப்பெண்ணை உயர்த்துவது.எனவே இறுதி பட்டியல் கண்ட பின்னர் கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே 140 AND ABOVE மதிப்பெண் பெற்றால் மட்டுமே நல்லது.
TNTET: வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும்.

வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும்: 
ஆசிரியர் நியமனத்தில் காலியிடம் அதிகம் எதிரொலி அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வெயிட் டேஜ் மார்க் அடிப்படையில் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.
வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு, பிளஸ்-2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் ஆகியவை குறிப்பிட்ட அளவு சேர்க்கப்பட்டு கட் ஆப் மார்க் 100-க்கு கணக்கிடப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களில் வரலாறு பாடத் தில்தான் காலியிடங்கள் அதிகம் (3,592).

எனவே, வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும். அதே போல், ஆங்கில பாடத்தில் 2822 காலியிடங்கள் இருப்பதால் அதற்கும் கட் ஆப் சற்று குறையும்.அதேநேரத்தில், தாவரவியல், விலங்கியல் பாடங் களில் காலியிடங்கள் வெறும் 260 (தலா) மட்டுமே உள்ளதால் அவற்றுக்கு கட் ஆப் மார்க் மிகவும் அதிகமாக இருக்கும். ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒவ்வொரு பாடத் திலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரம் தெரிய வில்லை. தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப போட்டி அமைந்திருக்கும். பட்டதாரி ஆசிரியர் தேர்வுபட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.

Tuesday, July 15, 2014

டிஇடி 2ம் தாள் தேர்வு வெயிட்டேஜ் பட்டியல் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ல் தேர்ச்சி பெற்றவர்களின், வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இறுதிப் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து வெயிட்டேஜ் தொடர்பாக சந்தேகம் இருப்பவர்கள் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள, தேதியில் தங்கள் ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று 2011ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. அதையடுத்து 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தாள் 2க்கான தேர்வில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 121 பேர் எழுதினர்.

அதில் 713 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். பிறகு அதே ஆண்டில் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 370 பேர் தேர்வு எழுதி 8,864 பேர் தேர்ச்சி பெற்றனர். அடுத்தகட்டமாக 2013ம் ஆண்டு நடந்த, தாள் 2க்கான தேர்வில் 4 லட்சத்து 311 பேர் எழுதினர்.42,109 பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்வு இந்த ஆண்டு நடந்தது. அதில் 4,693 பேர் தேர்வு எழுதி 945 பேர் தேர்ச்சி பெற்றனர். மேற்கண்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் மொத்தம் 43 ஆயிரத்து 242 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதில் வெயிட்டேஜ் மதிப்பெண் போடப்பட்டன.

வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றவர்களில் பணி நியமனம் பெறத் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.அதில் பாட வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் இன சுழற்சி முறையில் வெளியிடப்பட்டுள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவோர் டிஆர்பி இணைய தளத்தில் தங்கள் பதிவெண்ணை பதிவு செய்து, வெயிட்டேஜ் பற்றி தெரிந்து கொள்ளலாம். வெயிட்டேஜ் தொடர்பாக ஏதாவது மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள மையத்துக்கு நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

எந்த மாவட்டத்தில் சரிபார்ப்பு:
விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் மையங்களை சேர்ந்தவர்கள் 21, 22ம் தேதிகளில் விழுப்புரம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியிலும், சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டத்தினர் 23, 24ம் தேதிகளில் விழுப்புரம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 24, 25ம் தேதிகளிலும், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தினர் 26ம் தேதி திருச்சி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேனிலைப் பள்ளி, மதுரை, தேனி, புதுக் கோட்டை மாவட்டத்தினர் 21, 22ம் தேதிகளிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டத்தினர் 23, 24ம் தேதி மதுரை ஓ.சி.பி.எம் மேனிலைப் பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தினர் 25, 26ம் தேதிகளில் மதுரை, ஓசிபிஎம் மேனிலைப் பள்ளி

சேலம், நாமக்கல், மாவட்டத்தினர் 21, 22ம் தேதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டத் தினர் 23, 24ம் தேதிகளில் சேலம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, ஈரோடு, வேலூர், கோவை, நீலகிரி மாவட்டத்தினர் 25, 26ம் தேதிகளில் சேலம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நேரில் சென்று ஆட்சேபணை களை தெரிவிக்கலாம். மேலும், 2012, 2013ம் ஆண்டுகளில் நடந்த டிஇடி தேர்வு, 2014ல் நடந்த சிறப்பு டிஇடி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்தலில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள் ளது. மேற்கண்ட நபர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களில் நேரில் சென்று சான்று சரிபார்ப்பு செய்து கொள்ளலாம். இதையடுத்து தாள் 2க்கான இறுதிப் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்.
TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன? - அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை
இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம்பேரின் நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து வரும் பணிநியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுமா என்பது தொடர்பாகஆசிரியர்தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லலாம். அவர்களுக்கு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால்,அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள்தெரிவித்தன

Monday, July 14, 2014

TNTET காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?TNTET காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?

சிறுபான்மை மொழிவழி பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் விரைவில் தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9. The subject wise vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now. The vacancy details of Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC, MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This Notification is also applicable for all those vacancies.

Wednesday, July 9, 2014

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3-வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அப்போது தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதை கல்வியாளர்கள், ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் ஏராளமானவர்கள் வரவேற்றனர்.

ஆசிரியர் பணிக்கு தேர்வு
பின்னர் ஆசிரியர் வேலைவாய்ப்புக்கு அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டும் போதாது. அவர்கள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண், பள்ளிக்கூட பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் சமீபத்தில் முடிவடைந்துவிட்டன. இதைத்தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி விரைவில் முடிவடைந்து இன்னும் 10 நாட்களுக்குள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.
இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று(09.07.14) மேலும் பல அவமதிப்பு வழக்குகள்.

TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, 
இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று மேலும் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.நீதியரசர் ஆர்.சுப்பையா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறன.
TNTET- ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு - தினத்தந்தி செய்தி ,

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3-வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அப்போது தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதை கல்வியாளர்கள், ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் ஏராளமானவர்கள் வரவேற்றனர்.

ஆசிரியர் பணிக்கு தேர்வு

பின்னர் ஆசிரியர் வேலைவாய்ப்புக்கு அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டும் போதாது. அவர்கள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண், பள்ளிக்கூட பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் சமீபத்தில் முடிவடைந்துவிட்டன. இதைத்தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி விரைவில் முடிவடைந்து இன்னும் 10 நாட்களுக்குள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.

இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Saturday, July 5, 2014

டி.இ.டி., தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு:வழக்குகள் மீதான தீர்வால் டி.ஆர்.பி., சுறுசுறுப்பு.ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வில், இதுவரை, இறுதி பட்டியல் வெளியாகவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), தேர்வு தொடர்பாகவும், இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வு தொடர்பாகவும், 70க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான வழக்கு, முக்கியமானதாக இருந்தது.டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60 மதிப்பெண்ணுக்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40 மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' முறையில் கணக்கிடப்பட்டது. இதனால், அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறி, வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், பழைய முறையை ரத்து செய்து, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்க, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். எந்த முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கலாம் என, தன் உத்தரவில், உதாரணத்துடன் சுட்டிக் காட்டினார்.அதன்படி, தேர்வர் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும், மே 30ம் தேதி, பிறப்பிக்கப்பட்டது. இது, டி.இ.டி., பிரச்னையில், ஒரு தெளிவை ஏற்படுத்தியது.இந்நிலையில், தேர்வு விடைகளை எதிர்த்து தொடரப்பட்ட, 70க்கும் அதிகமான மனுக்கள் மீது, நீதிபதி நாகமுத்து, இந்த வாரத்தில் உத்தரவுகள் பிறப்பித்தார்.இதன் காரணமாக, டி.இ.டி., தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும், முடிவுக்கு வந்துள்ளன.இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:விடைகள் குறித்து, புதிய உத்தரவு எதுவும் எங்களுக்கு பிறப்பிக்கவில்லை. 'டி.ஆர்.பி., வெளியிட்ட விடைகள் சரியானவை' என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே, தேர்வு பட்டியலை வெளியிட, இனி, எங்களுக்கு எந்த தடையும் கிடையாது.ஆசிரியர் தேர்வுக்கான, புதிய அரசாணையின் அடிப்படையில், விரைவில், தேர்வு பட்டியலை வெளியிடுவோம். அதற்கான பணிகளை, இப்போதே துவக்கி உள்ளோம்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

Wednesday, July 2, 2014

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853
ஆங்கிலம் - 10716
கணிதம் - 9074
தாவரவியல் - 295

வேதியியல் - 2667

விலங்கியல் - 405
இயற்பியல் - 2337
வரலாறு - 6211
புவியியல் - 526

மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் : 42084

Sunday, June 29, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன்.

அந்தத் தேர்வில் நான் 81 மதிப்பெண்கள் பெற்றேன். அந்தத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 33-ஆவது கேள்விக்கு கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு என்ற கேள்விக்கு டி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட சமுத்திரம் என்பதை பதிலாக அளித்தேன். ஆனால், அந்தக் கேள்விக்கு எனக்கு மதிப்பெண் வழங்கவில்லை.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த விடையில் 33-ஆவது கேள்விக்கு, பி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட ஆழி என்பதுதான் சரியான விடை எனத் தெரிவித்தது. அதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். எனவே, எனக்கு உரிய மதிப்பெண் வழங்கி பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நடந்தது. விசாரணையின்போது, தமிழில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை தமிழ் ஆசிரியர்கள் 3 பேரிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் ஆழிதான் சரியான பதில் எனத் தெரிவித்தனர். மேலும், சமுத்திரம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்றும், வடமொழி சொல் எனவும் தெரிவித்தனர். அதனால், சமுத்திரம் என்பது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு... என்ற கேள்விக்கு, 4 வாய்ப்புகளாக (ஏ) முந்நீர், (பி) ஆழி, (சி) பரவை, (டி) சமுத்திரம் என கொடுக்கப்பட்டன. இதில், (பி) ஆழிதான் சரியான பதில். அந்தச் சொல்லுக்கு, மோதிரம், சக்கரம், கடல் என்று 3 வெவ்வேறு பொருள்கள் உண்டு என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ..சமுத்திரம்... என்ற சொல்லுக்கு கடல், ஓர் எண், மிகுதி என்ற வெவ்வேறு பொருள்கள் உண்டு எனவும், சென்னைப் பல்கலைக்ழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் அகராதியில் கடல், பேரெண், மிகுதி என பொருள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, வேறு 2 தமிழ் அகராதிகளிலும் இது போன்ற பதில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

நீதிமன்றம் நியமித்த தமிழ் நிபுணர்கள், "சமுத்திரம்' என்பது வடமொழிச் சொல்.

அதனால், அது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர். "சமுத்திரம்' என்பது தமிழ்ச் சொல் இல்லையென்றால், தமிழ் அகராதியில் அந்த சொல் இடம் பெற்றிருக்காது. ஆனால், தமிழ் அகராதியில் அதற்கு 3 பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் முழுவதும் (நான்கும்) சரியானது இல்லை. அதேபோல் மனுதாரருக்கு எந்த ஒரு நன்மை வழங்கினாலும், அது தொடர்பான மற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட 33-ஆவது கேள்விக்கு பி மற்றும் டி பதில் அளித்திருந்த அனைத்து தேர்வர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.

மேலும், அனைத்து விடைத்தாள்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுமதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த பணியை ஒரு வாரத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 26, 2014

ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ் மார்க்’
அரசாணையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் மனுதாக்கல்

புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகர். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, எம்எட் முடித்துள்ளேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளேன். கடந்தாண்டு நடந்த டிஇடி தேர்வில் 84 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கல்வித்துறையின் சார்பில் கடந்த மே 30ம் தேதி அரசாணை எண் ‘71’ வெளியிடப்பட்டது. அதில், டிஇடி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு 100 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2விற்கு 10, டிகிரிக்கு 10, பிஎட் 15 என தனித்தனியாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறையால் 10 ஆண்டுக்கு முன் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இதே போல் டிகிரி பாடத்திட்டமும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடுகிறது. தன்னாட்சி கல்லு£ரிகளிலும் பாடத்திட்ட முறை மாறுபடுகிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி ரவிசந்திரபாபு விசாரித்தார். மனு குறித்து பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தொடக்ககல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தார்
ஆசிரியர் தகுதித் தேர்வு என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!
by TAMIL HINDU

அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க முடியும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகள் வைத்து கண்டறியப்பட்டு, பணியிலமர்த்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானபோது, பரவலான வரவேற்பை பலரிடம் பெற்றது. வெறும் பட்டப்படிப்பும் பட்டயப்படிப்பும் மட்டுமே ஆசிரியருக்கானத் தகுதியாக நிலவிவந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உறுதியானது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லாதவை என்ற குரல்களும் பல ஆசிரியர்கள், கல்விச் சங்கங்களில் இருந்து வெளிவந்தன. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவரும் வரை, இந்த நிலையில் பெரிய மாற்றம் இல்லை. அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே குழப்பங்களும், குளறுபடிகளும் ஆரம்பித்தன.

முதல் குளறுபடியாக, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைகள் வழங்கப்படாமல் இருந்ததில் துவங்கியது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நெருங்கிய உறவினர்களாக கருதப்படும் தேசியத் தகுதித் தேர்வு (NET), மாநிலத் தகுதித் தேர்வுகள் (SET) போன்றவற்றில்கூட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண்களில் சலுகைகள், அவை தொடங்கிய நாளிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (29-06-2014) நடக்கப் போகும் தேர்வு வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

மாநில அளவில், ஆராய்ச்சியாளர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் நடத்தப்படும் தகுதித் தேர்விலேயே இடஒதுக்கீடு பின்பற்றப்படும் போது, ஆசிரியர்களுக்கானத் தகுதித் தேர்வில் திறமை மட்டுமே முக்கியம், இடஒதுக்கீடு திறமையையும் தகுதியையும் குறைத்துவிடும் என்ற அரதப்பழசான சொத்தை வாதம் முன் வைக்கப்பட்டது.

(இங்கே ஒரு கிளைச் செய்தி, இட ஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவுக்கே உரித்தான ஒரு சலுகை, இட ஒதுக்கீட்டால் இந்தியாவின் முன்னேற்றம் தடைபடுகிறது என்ற கூச்சல்காரர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ள விரும்பாத ஒரு தகவல். ஒரு சமூகம் பல நூறு ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்டு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியிருந்தால், அங்குச் சமநிலையை உருவாக்க ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு சில சலுகைகள் வழங்கப்படுவதுதான் சமூக நீதி. இந்தச் சமூக நீதி உலகளவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் கடைபிடிக்கப்பட்டே வருகிறது. அமெரிக்காவில் 'சீர்திருத்தச் செயலாக்கம்' (Affirmative action அல்லது positive discrimination) என்ற பெயரிலும், positive action என்ற பெயரில் இங்கிலாந்திலும், employment equityஎன்ற பெயரில் கணடாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவை விட இவை முன்னேறிய நாடுகளே).

இரண்டாவது குளறுபடி, முதல் முறை நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் குறைவான நேரம் வழங்கப்பட்டது. 150 வினாக்களுக்கு 90 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்பட்டது. அதாவது ஒரு வினாவை அரை நிமிடத்திற்குள் படித்து, அதற்கு விடையை யோசித்து விடைத்தாளில் குறிக்க வேண்டும். இப்படி ஆசிரியர்களின் தகுதியை கண்டறிய வைக்கப்பட்டத் தேர்வு, ஆசிரியர்களின் சிந்திக்கும், செயல்படும் வேகத்தை கண்டறிவதற்கு வைக்கப்பட்டத் தேர்வாக மாறியது. நுண்ணறிவைச் சோதிக்க உளவியலாளர்கள் நடத்தும் சோதனை முறைகளில் கூட இப்படி சிந்திக்கும் வேகத்தை அளவிடக்கூடிய சோதனைகள் இருக்கிறதா தெரியவில்லை. இதுவரை இல்லாமல் போனால், உளவியல் மருத்துவர்கள்தான் இதனை முன்னெடுக்க வேண்டும்.

இந்த நேரக்குளறுபடியும் கடினத்தன்மையும் வரலாறு கண்டிராத ஒரு தேர்ச்சி விகிதத்தை அந்தத் தகுதித் தேர்வில் காட்டியது. சுதாரித்த அரசு, உடனே ஒரு துணைத் தேர்வை நடத்தியது. பொருளாதாரக் கோட்பாடுகளில் ஒன்றான தேவை - இருப்பு (Demand - Supply) கோட்பாட்டின் காரணமாக ஆசிரியர்களின் சிந்தனை வேகத்தை அளவிடாமல், அவர்களின் தகுதியைச் சோதிக்கும் வகையில் அந்தத் துணைத் தேர்வு நடத்தப்பெற்றது.

மூன்றாவது குளறுபடியாக சிறப்பளிப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) என்ற பெருங்குழப்பம் விளங்கியது. ஆனால், முதல் இரண்டு தகுதித் தேர்வுகளிலும் தேவையை விட இருப்பு குறைவாக இருந்ததால் இந்தக் குளறுபடி தலையெடுக்கவே இல்லை. ஆனால், மூன்றாவதாக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் (2013ஆம் நடத்தப்பட்டது) தீராத தலைவலிச் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.

இதுவரையிலான குளறுபடிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பெருங்குளறுபடிகளை 2013ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கொண்டு இன்று வரை தீராத் தலைவலியாக இருந்து கொண்டிருக்கிறது. நேரம் ஏற்கெனவே சரி செய்யப்பட, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குச் சலுகை மதிப்பெண்கள் இல்லை என்ற அறிவிப்போடு தேர்வு நடைபெற்றது.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்டத் தேர்வு முடிவுகள் நவம்பர் 5ஆம் தேதி வெளிவந்தது. விடைகளில் ஏற்பட்ட குழப்பங்கள் சரி செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் 11-01-2014 அன்று வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளும் ஜனவரி 2014ல் முடிந்தது, தமிழக முதல்வரின் பிறந்த நாள் அன்று இவர்களுக்குப் பணி வழங்கப்படும் என்று வாய்மொழியாகத் தகவல் வெளிவந்தது.

மூன்று முறை நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான அறிவிப்புகளிலும் இந்த மதிப்பெண் சலுகை பற்றி அறிவிக்கப்படவே இல்லை, 2012 ஆம் ஆண்டு முதல், 2014 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், ஆசிரியர் தேர்வு வாரியமும் விடாப்பிடியாக இட ஒதுக்கீடு தகுதியைக் குறைத்துவிடும் என்றே பல இடங்களிலும், நீதிமன்றத்திலும் வாதிட்டு வந்தனர். அடுத்த ஒரு மாத இடைவெளிக்குள்ளாகவே கல்வியாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரது நீதிமன்ற செயற்பாடுகள், போராட்டங்கள் ஆகியவை மூலமாக இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. இதுவரை சலுகை மதிப்பெண்கள் தகுதியைக் குறைத்து விடும் என்று வாதிட்ட அரசு, ஐந்து சதவீதம் சலுகை வழங்கப்பட்டால் 82.5 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற கணக்கீடுகளுக்குப் பதிலாக 82 மதிப்பெண்கள் பெற்றவர்களும் தேர்ச்சிபெற்றவர்கள் என்றே அறிவித்தது.

இவ்வாறு கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை வெகு வேகமாக செயல்படுத்த முடியாத அளவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பணியாளர்கள் பற்றாக்குறை, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளும், தேர்தல் நடத்தை விதிகளும் என்று பல காரணங்களால் இந்தப் பணிகள் தள்ளிப் போனது.

இதற்கிடையில் சிறப்பளிப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) குளறுபடி இந்தாண்டு தேர்வில் பெரியளவில் குழப்பத்தை விளைவிக்க தேர்வு எழுதி ஓராண்டு ஆகப்போகும் நிலையிலும் இதுவரை பணி நிரப்பப்படாமல் உள்ளது. அரசு அறிவித்த சிறப்பளிப்பு மதிப்பெண்கள் கணக்கிடும் முறையானது இதுவரை புள்ளியியல் கண்டிராத உத்திகளைக் கொண்டிருந்தது. தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றவருக்கும் 104 மதிப்பெண் பெற்றவருக்கும் சிறப்பளிப்பு மதிப்பெண் 42 வழங்கப்படும். ஆசிரியர் பட்டப் படிப்பில் 69.98 மதிப்பெண் பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண் பன்னிரெண்டும், 70.00 பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண் 15ம், 99.98 மதிப்பெண் பெற்றவருக்கும் அதே 15 சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதே போலத்தான் இளநிலை பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. இத்தகைய கேலிக்கூத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அறிவியல்பூர்வமாக இந்தச் சிறப்பளிப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. மீண்டும் பணி நிரப்பும் பணிகள் மந்தமைடைந்தது.

இவ்வாறு சிறப்பளிப்பு மதிப்பெண்களின் குழப்பங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது என நினைக்க, மதுரை உச்ச நீதிமன்ற கிளை மீண்டும் ஒரு உத்தரவை வழங்கியிருக்கிறது. இந்தச் சிறப்பளிப்பு மதிப்பெண்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பையும், பணி அனுபவத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து அவர்களது இணைய தளத்தில் எந்த தகவலும் முறையாக இற்றைப்படுத்தப்படுவதில்லை. அதிகாரப்பூர்வமான தகவல்களும் இல்லை. ஊடகங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தைச் சேர்ந்த முக்கியமான நபர் தெரிவித்தார், வட்டாரம் தெரிவித்தது என்றே தகவல்கள் வருகிறது. இதனாலேயே பல வதந்திகளும் உலா வருகிறது. சமீபத்திய வதந்தி (முறைப்படி தேர்வு வாரியம் அறிவிக்காத வரையில், அது வதந்திதான்.) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதைப் போல, UG-TRB தேர்வு நடத்தப்படும், அதில் பெறும் மதிப்பெண்களில் 50 சதவீதமும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற சிறப்பளிப்பு மதிப்பெண்ணின் 50 சதவீதமும் சேர்த்து பெறப்படும் மதிப்பெண்ணிலிருந்தே பணிவழங்கப்படும்.

இப்படி ஒரு நடைமுறை கடைபிடிக்கப்படுமானால், அது எளிமையானதொரு தேர்வை மேலும் மேலும் சிக்கலாக்குவதற்குச் சமம் ஆகும். அதோடல்லாமல், முதுநிலை ஆசிரியர்களுக்கு பின்பற்றப்படும் தேர்வு முறையைப் போன்ற தேர்வே என்றால், ஆசிரியர் தகுதித் தேர்வு எதற்கு? முதுநிலை ஆசிரியர்களுக்குப் பின்பற்றப்படுவது போன்ற அந்த ஒரு தேர்வே போதாதா? அல்லது முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஒரு தேர்வு இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏன் சிக்கலான இரண்டு தேர்வு? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

இதுவரை வெளிவந்த மூன்று அறிவிப்புகளிலுமே எத்தனை பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பது அறிவிக்கப்படவே இல்லை. தேர்வு எழுதப் போகும் தேர்வர்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அரசும், தேர்வு வாரியமும் நினைக்கிறதா? அல்லது அவர்களிடமே அந்தத் தகவல் முழுமையாக இல்லையா?

இதற்கிடையில் மாற்றுத் திறனாளிகளையும் இதே தகுதித் தேர்வை எழுத வேண்டும், என்ற குளறுபடிகள் தாண்டவமாட, அவர்களுக்குத் தனியாக சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதே போல ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை ஆசிரியர்களுக்கானத் தேர்வுகளும் குளறுபடியும் ஓராண்டாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய தேதியில் அதிகமான நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு துறை கல்வித்துறையாகத் தான் இருக்கும். கல்வித்துறையில் இத்தகைய குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீதிமன்றப் படியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால் இத்தனை வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது கல்வித்துறை. இத்தனை வழக்குகளை எங்களால் கையாளமுடியவில்லை, அத்தனை வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக விசாரிக்கும் படி ஆசிரியர் தேர்வு வாரியம் கோரும் அவல நிலையும் ஏற்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அண்டை மாநிலங்களில் பெருமளவு குழப்பம் இல்லாமல், நடத்தப்பட்டுக் கொண்டிருக்க, ஏன் தமிழகத்தில் மட்டும் இத்தனை குழப்பமான சூழ்நிலை நிலவ வேண்டும்? பதில் மிகவும் எளிமையானது. தேர்வுக்கான நெறிமுறைகள் தெளிவாக வகுக்கப்படாமையே ஒரே காரணம்.

இந்தியாவிலேயே முதன்முதலாக போட்டித்தேர்வுகளுக்கான வாரியத்தை அமைத்த மாநிலத்தில் இத்தகையதொரு நிலை என்பது உண்மையிலேயே வேதனைதான். ஆசிரியர் தேர்வு வாரியம், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும், வினாத்தாளை வடிவமைக்க எப்படி ஒரு குழு அமைத்துச் செயல்படுகிறதோ அதே போல, தேர்வு நடத்தும் முறைகளையும், பணி நியமன முறைகளையும், சிறப்பளிப்பு மதிப்பெண்கள் வழங்குவதற்கான முறைகளையும், ஏனைய வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைக்க ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து மீண்டும் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதனை அடியொட்டி தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் இத்தனைச் சிக்கல்கள் இல்லாமல் இருந்திருக்கும்.

தேர்ச்சி பெற்று பல மாதங்களாக பணி கிடைக்காமல் தேர்வர்களும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிப்பட வேண்டிய நிலையும் இருந்திருக்காது. ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க ஊதியம் இல்லாமல், ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களை சேவை செய்ய வருமாறு அழைக்க வேண்டிய கட்டாயமும் இருந்திருக்காது.

ஆசிரியர் தேர்வு வாரியமும், அரசும் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்காததின் விளைவு, தேர்வர்கள் நீதிமன்றங்கள் மூலமாக இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்க உதவிக் கொண்டிருக்க்கிறார்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகை வழங்கியது, சிறப்பளிப்பு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்பட வேண்டும், சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கும் முறை என்று எல்லாவற்றையும் நீதிமன்ற உத்தரவின் நூல்பிடித்தே அமைக்கப்பட்டிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளங்களில் பிரச்சினைகள் என்றால், அதனை முற்றாகத் தீர்க்க இற்றைப்படுத்தல்களைச் செய்யாமல், பேட்ச்கள் (Patch) எனப்படும் ஓட்டை உடைசல்களை அடைக்கும் வழிமுறைகளையே செய்வார்கள். அதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காமல் நீதிமன்ற உத்தரவுகளையே பின்பற்றி வருகிறது.

கல்வியாளர்கள் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து, ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவை கட்டாயம் பின்பற்றும் படியும், தேர்வு முடிந்த குறிப்பிட்ட காலவரையறையில் பணி நிரப்புதல் செய்யப்பட வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை வாரியம் செயல்படுத்தும் படி செய்ய வேண்டியதுதான். அதாவது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்களை நீதிமன்ற உதவியோடு கல்வியாளர்களாகிய நாமே செய்ய வேண்டியதுதான்.