Saturday, May 23, 2015

TNTET : 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் சாத்திய கூறுகள் இருக்கிறது. தகுந்த ஆதரங்களுடன் சிறப்பு பார்வை


வணக்கம் நண்பர்களே,
ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் தளர்வில் 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தமிழக அரசு.
அதன் பிறகு தேர்வு முடிந்த பின்பு அளிக்கபட்டது என காரணம் காட்டி 5% மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இறுப்பினும் இவை தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இவற்றில் நாம் எந்த கருத்தும் கூற இயலாது நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. இருப்பினும் சில அடிப்படை ஆதரங்களுடன் கூடிய விவதம் மற்றும் பேச்சு சுகந்திரத்தின் அடிப்பையில் கருத்துக்களை வெளியிடலாம்.
5% மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதி தேர்வில் அளிக்கப்பட்டது தவறு கிடையாது ஆனால் இடையில் அளிக்கப்பட்டது தான் தவறு என நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு 110 விதியின் கீழ் கொண்டுவந்தவை அவை அரசின் கொள்கை என அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்கும் எனவே பெரும்பாலும் அரசின் முடிவுகளை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கீழ் நீதிமன்றங்களில் ஏற்காத பல அரசின் முடிவுகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது என்பதற்கு பல ஆதரங்கள் உள்ளது. எனவே 5% மதிப்பெண் தளர்வு இனி வரும் தேர்வுகளில் கட்டாயம் இருக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.
பாண்டிச்சேரி மாநிலம் தமிழ்நாடு அரசின் கல்வியை பின்பற்றியது அதே போல் ஆசிரியர் தகுதி தேர்வையும் பின்பற்றியது. நம் தமிழ்நாட்டில் 5% மதிப்பெண் தளர்வு அகற்றப்பட்டபோது அங்கும் நம்மை பின்பற்றுவதால் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டது சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி சென்று பண்டிச்சேரி மாநிலத்தில் பணியிடங்களை நிரப்பக்கூடாது 5% மதிப்பெண் தளர்வு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை வாங்கினர்.
பாண்டிச்சேரி மாநிலம் பிறகு மத்திய அரசின் கல்வியை (CBSE) பின்பற்றியது அதன்பிறகு அங்கு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை பின்பற்றியது அதில் தேர்ச்சி பெறும் மதிப்பெண்னிலும் மாற்றம் கொண்டு வந்து 18tt' March,2Ol5 அன்று G. O. Ms. No. 76 என்ற ஒரு புதிய அரசானை ஒன்று வெளியானது அதில்
The Director of school Bducation has further proposed
qualifying marks in CTET for various categories as follows:
Sl.No Category Qualifying marks
1 General Category 6O% ( 90 marks)
2 Most Backward Class 55% (82 marks)
3 Extreme Backward Class 55% (82 marks)
4 Other Backward Class 55% (82 marks)
5 Backward Class Muslim 55% (82 marks)
6 Scheduled Caste 5O% (75 marks)
7 Backward Tribe 5O% (75 marks)
8 Differently- abled persons50% (75marks)
என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது
-இரா.கார்த்திக், B.Lit.,D.T.Ed.,COPA., (Gurukulam)

Tuesday, May 19, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு


தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது.அதன்படி,
இப்போது பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற நவம்பர் 15, 2016 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகஸ்ட் 23, 2010-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெறும் ஆசிரியர்களையே 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நியமிக்க வேண்டும். எனினும், இந்தச் சட்டப்பிரிவுகளை அமல்படுத்த 5 ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது.இந்த நிலையில், ஏப்ரல் 1, 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தப் பணி நியமனத்துக்கு தாற்காலிக அனுமதி வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பணியாற்றிய காலத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.அதே உத்தரவில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதஆசிரியர்களை நியமித்ததில் எந்தத் தவறும் இல்லை. எனினும், இந்த ஆசிரியர்கள் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான மற்றொரு வழக்கில் தனி நீதிபதியின் இந்த உத்தரவு செல்லும் என்றுஉயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.இந்தச் சட்டம் 2010-ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 23-இல் நடைமுறைக்கு வந்தாலும், தமிழக அரசு இந்தச் சட்ட விதிகளை நவம்பர் 15, 2011-இல்தான்வெளியிட்டது.இப்போது, அந்த தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.வழக்குகளால் தாமதம்: கடந்த 2013, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இதன் காரணமாக, 2014-ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த வழக்குகள் இப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளை விரைவில் முடித்து, இந்த ஆண்டிலேயே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.